search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை"

    • பொன்னுச்சாமி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு அடுத்த ஸ்ரீரங்கம் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் மகன் பொன்னு ச்சாமி. இவரது மனைவி சாந்தி. பொன்னுச்சாமி நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் பொன்னுச்சாமி அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மன வேதனை அடைந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னுச்சாமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி அர ச்சலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்குபோட்டு கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய வலசு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் செந்தில்குமார். இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். செந்தில்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இவர் நீண்ட நாட்களாக தனக்கு திருமணம் ஆகவில்லை என மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நி லையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செந்தி ல்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரின் சகோதரர் தங்க ராஜ் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பி ரமணி மகன் பசுபதி (வயது 28). இவரது மனைவி துர்கா நந்தினி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஆனால் இதுவரை குழ ந்தை இல்லை. இதனால் மன வேதனை அடைந்த பசுபதி அடிக்கடி மது அருந்துவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சலில் இருந்த பசுபதி வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த மரு த்துவர்கள் பசுபதி வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் துர்கா நந்தினி இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முகமது யூசுப் (37). இவருக்கு கடந்த பல வருட ங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்த 3 ஆண் குழந்தைகள் பிறந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டன.

    இதனால் அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு முன் மனைவி அவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சலுக்குள்ளான முகமது யூசுப் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு முகமது யூசுப்பும், அவரது தாயார் சாய்ரா பானுவும் (58) சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளனர்.அதிகாலை சாய்ராபானு கண் விழித்துப் பார்த்த போது வீட்டின் விட்டத்தில் முகமது யூசுப் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே முகமது யூசுப் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர் வாய்க்கால்மேடு சடையப்பம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பிரசாந்த் (29). கட்டிட தொழிலாளி. பிரசாந்த்திற்கு திருமணத்திற்காக அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

    இருப்பினும் வரன் சரியாக அமையவில்லை. இதனால் பிரசாந்த் கடந்த சில தினங் களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசாந்த் வீட்டின் அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரசாந்த்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல் பாளையம், கமலா நகரைச் சேர்ந்தவர் வள்ளி (50).இவரது கணவர் செல்வம் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார்.

    இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் பிரபாகரன் (32). கூலிவேலை செய்து வருகிறார். இளைய மகன் ஆனந்த் (29). டிப்ளமோ படித்துள்ள இவர், பி.வி.சி. கதவுகள் பொருந்தும் வேலை செய்துவந்தார்.

    இந்த நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கு மாறு ஆனந்த் தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார்.

    அவரும், மூத்த மகன் பிரபாகரனுக்கு திருமணம் செய்த பின்னர் ஆனந்துக்கு செய்து வைப்பதாக கூறி யுள்ளார். இதனால், ஆனந்த் மன வருத்தத்தில் இருந்து ள்ளார்.

    இந்த நிலையில் வள்ளி, தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்துக்கு நேற்று முன் தினம் சென்று விட்டார்.

    அன்று இரவு வீட்டில் வள்ளியின் மகன்கள் பிரபாகரனும், ஆனந்தும் இருந்துள்ளனர். மூத்த மகன் பிரபாகரன் இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக சென்றுவிட்டு இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டி ருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்கா ததால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது, படுக்கையறையில் ஆனந்த் பேனில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர், ஏற்கனவே ஆனந்த் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
    • போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பி யூர் புதுஐயம்பாளையம் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணியம் (வயது 67). இவரது மகன் நவீன் ராஜ் (35). நவீன் ராஜ்க்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்ப ட்ட விபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தாக கூறப்ப டுகிறது.

    இதையடுத்து நவீன்ராஜ் தொடர்ந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் உடல் நிலை சரியாகாததால் நவின்ராஜ் நீண்ட நாட்க ளாக சிரமபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் சம்ப வத்தன்று மன உளைச்சலில் இருந்த நவீன்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். பின்னர் இதை பார்த்த நவீன்ராஜின் தாய் அவரை மீட்டு கோபி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர் இவர் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின் னர் இது குறித்து நவீன் ராஜின் தந்தை சுப்பி ரமணியம் வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகா ரின் அடிப்படையில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி ரேனுகா. இவர்களது மகன் மணி கண்டன் (30). இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    இதனால் மணிகண்டன் மன வேதனையில் இருந்து வந்தார் என கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாக வும், இதனால் அவர் தின மும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று காலை மணிகண்ட னின பெற்றோர் வேலை க்கு சென்று விட்டனர். அவர்கள் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர், அப்போது வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்காமல் இருந்தது.

    இதையடுத்து அவர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதை தொடர்ந்து அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • வீட்டில் காதல் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
    • மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி, 

    ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ். இவரது மகன் விக்னேஸ் (வயது18). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    இவர் குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஸ் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×